Monday, August 20, 2007

கூடைக்குள் தேசம்-02

06
விடிந்து விட்டால்
அணைந்து விட்டதாக அர்த்தமா
நட்சத்திரங்கள்.

07
பாலைவனத்துக்கு மேலே
மழை முகில்கள்
எம்மவர் கண்ணீர்

08
புதியவன் நுழைய
கலவரம் தொடங்கிவிட்டது
நீர்ப்பரப்பில் நீர்த்துளி!

09
பசுமையுடன் இளமை முடிய
காவியுடன் வெளியேற்றம்
இலைகள்!

10
யுத்த தர்மப்படி அறைகூவி
போர் நடந்து முடிந்தது-
நுளம்பு.

No comments: