Tuesday, August 28, 2007

கூடைக்குள் தேசம்

31
படுக்கையறையுடன் வீடு
இனியாருக்கும் பயமில்லை
சவப்பெட்டி.

32
தீயை முத்தமிட்டும்
எரியா பஞ்சுப்பொதிகள்
வெண்முகில்கள்.

33
ம்..கையை எடுங்கள்
எத்தனை கண்கள் பார்க்கின்றன
நட்சத்திரங்கள்.

34.
பெய்யெனச் சொல்லியும் மழை
பெய்யவில்லை- கற்பில்லைத்தான்
காடுகளுக்கு.

35
முதுகில் கனக்கும் அழுக்கை
அளந்து கடந்த தூரத்தை கணக்கிடும்
நதி.

36.
நிலவின் மரணத்தில்
துக்க அனு~;டானம்
அமாவாசை.

37.
பகல் முழுவதும்
நிம்மதியான உறக்கம்
தலையணை.

38.
எண்ணிக் கொள்ளுங்கள்
எத்தனை சீதைகள்?
விட்டில் இராச்சியத்தில்.

39.
மாடியிலிருந்து ஏசிய துரை
தொழிலாளியின் கால்களில் வீழ்ந்தான்
நிழலின் ஒத்திகை.

40.
தீக்கு திசை மந்திரம்
கற்றுக் கொடுத்தது காற்று
காடு எப்போ பஸ்மம்.

1 comment:

J S Gnanasekar said...

//பெய்யெனச் சொல்லியும் மழை
பெய்யவில்லை- கற்பில்லைத்தான்
காடுகளுக்கு//

அருமை.

-ஞானசேகர்